ஆப்நகரம்

லாரி மோதி கார் விபத்து.! தந்தை, மகள் இருவர் பலி..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, எதிரே வந்த லாரி மீது கார் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Samayam Tamil 3 Sep 2019, 6:30 pm
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி பலமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த மில்டன் ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் ரெனி லாரொஸ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரியை ஓட்டி வந்தசிராஜூதின் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
Samayam Tamil man dead


ATM-ல் ரூ.16 லட்சம் கொள்ளை! குடிபோதையில் தாமாக போலீசில் சிக்கிய கொள்ளையன்!!

விபத்தை அறிந்து நேரில் விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் விபத்துக்குள்ளான இருவரும் திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரம் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதில் மில்டன் ஜெயக்குமார் ஒய்வு பெற்ற தீ அணைப்பு அதிகாரியாவார். லாரி ஓட்டுநர் சிராஜூதின் தூக்க கலக்கத்தில் வண்டியை இயக்கியதால் இந்த விபத்து நடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலுக்காக தற்கொலை நாடகம்: வாலிபர் உயிரோடு இருப்பது தெரியாமல் இரவு பகலாக அணையில் மூழ்கி தேடிய போலீசார்!

அடுத்த செய்தி