ஆப்நகரம்

காதலை கைவிடுக்க மறுத்த மகளை கொள்ள முயன்ற தந்தை

ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ,தனது மகள் காதலை கைவிட மறுத்ததால் விஷம் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

TNN 11 Jul 2016, 6:57 pm
ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ,தனது மகள் காதலை கைவிட மறுத்ததால் விஷம் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
Samayam Tamil father try kill her daugther
காதலை கைவிடுக்க மறுத்த மகளை கொள்ள முயன்ற தந்தை


ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரசிம்ம ரெட்டி. இவருக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகள் அங்குள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.இவரின் மகளுக்கும் அந்த கல்லூரி படிக்கும் வேறொருவருக்கும் காதல் மலர்ந்தது.
இதனையறிந்த ரெட்டி தனது மகளை காதலை கைவிடுமாறு பலமுறை எச்சரிக்கை விடுத்துவந்தார். ஆனால் அவரது மகள் காதலை கைவிட மறுத்துவந்துள்ள நிலையில் ஆத்திரமடைந்த ரெட்டி தனது மகளின் வாயில் விஷத்தை வலுக்கட்டயமாக ஊற்றி கொலைச்செய்ய முயன்றார். அப்போது சுதாரித்துக் கொண்ட அவரது மகள் மயங்கி விழுவது போல நடித்துள்ளார். தனது மகள் இறந்து விட்டார் என நினைத்த ரெட்டி அவரை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.பின்னர் அருகிலிருந்த மக்களின் உதவியுடன் அவரது மகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து நரசிம்ம ரெட்டியை கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி