ஆப்நகரம்

இந்தோனேசியா விமான விபத்தில் காதலனைப் பறிகொடுத்த பெண் செய்த காரியத்தைப் பாருங்க!!

பெண் ஒருவர், விமான விபத்தில் இறந்த தன் காதலனுக்காக தனியாக கல்யாண போட்டோ சூட் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Nov 2018, 5:07 pm
கடந்த மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட விமான விபத்தில், தனது காதலனைப் பறிகொடுத்த பெண் ஒருவர், தன் காதலனுக்காக தனியாக கல்யாண போட்டோ சூட் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil இந்தோனேசியா விமான விபத்தில் காதலனைப் பறிகொடுத்த பெண் செய்த காரியத்தைப் பாருங்க!!
இந்தோனேசியா விமான விபத்தில் காதலனைப் பறிகொடுத்த பெண் செய்த காரியத்தைப் பாருங்க!!


கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி, லையன் ஏர் நிறுவனத்தின் விமானம் ஒன்று ஜகார்த்தாவில் இருந்து பனால் பினாங் நகரத்திற்குப் பயணம் மேற்கொண்டது. ஆனால், எதிர்பாராத விதமாக அந்த விமானம் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 189 பேரும் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த விமானத்தில் பனால் பினாங் நகரைச் சேர்ந்த ரியோ நந்த பிரதமா என்ற என்ற மருத்துவரும் பயணம் செய்துள்ளார். இவரும், இந்தான் சையரி என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நவம்பர் 11 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பிரதமா இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தோனேசியா விமான விபத்தில் காதலனைப் பறிகொடுத்த பெண் செய்த காரியத்தைப் பாருங்க!!

பிரதமா தனது பயணத்திற்கு முன்பாக சையரியிடம் நான் வரவில்லை என்றால், திருமணத்தின் போது நீயே தனியாக போட்டோ எடுத்துக்கொள் என விளையாட்டாக கூறியுள்ளார். ஆனால், இது நிஜமாகவே, தனது காதலரின் ஆசையை நிறைவேற்ற சையரி, தனியாக நின்று போட்டோ எடுத்துக்கொண்டுள்ளார்.

மேலும், அந்தப் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “என்னால் விவரிக்க முடியாத சோகத்தில் நான் இருந்தாலும், உனக்காக நான் சிரிக்கின்றேன்”, என கூறியுள்ளார். அவரின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்