ஆப்நகரம்

செயல்பாட்டுக்கு வந்தது உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேசன்!

துபாயில் போலீஸ் இல்லாமல் இணையத்தின் மூலம் இயங்கக்கூடிய ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேசன் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

TNN 10 Oct 2017, 11:35 am
துபாய்: துபாயில் போலீஸ் இல்லாமல் இணையத்தின் மூலம் இயங்கக்கூடிய ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேசன் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
Samayam Tamil first smart police station opened in dubai
செயல்பாட்டுக்கு வந்தது உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேசன்!


எஸ்பிஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேசனில் காத்திருப்பு பிரிவு, கண்காட்சி பிரிவு மற்றும் சேவை பிரிவு என மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன.

இங்கு புகாரளிக்க வருபவர்கள் இங்குள்ள எந்திரத்தில் தாங்கள் பெற விரும்பும் சேவையைப் பற்றி தெரிவித்து டோக்கன் பெற வேண்டும். பின், காத்திருப்பு அறையில் அவர்களுக்கான முறை வரும் வரை காத்திருக்க வேண்டும். அவர்கள் முறை வந்ததும், திரையில் தோன்றும் காவலரிடம் அவர்களுடைய புகாரைத் தெரிவிக்கலாம்.

இந்த ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேசனில் தற்போது புகார் அளித்தல், அபராதம் செலுத்துதல், விபத்தைப் பதிவு செய்தல் மற்றும் ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு பொதுமக்கள் வசதிக்காக எஸ்பிஎஸ் இல் இரு காவலர்கள் உள்ளனர். பொதுமக்கள் பயன்பாடு அதிகரித்ததும் அவர்கள் விலக்கிகொள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First Smart Police Station Opened in Dubai.

அடுத்த செய்தி