ஆப்நகரம்

நோயாளிக்கு தரையில் சாப்பாடு போட்ட மருத்துவமனை..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு வெறும் தரையில் மருத்துவமனை ஊழியர்கள் உணவளித்துள்ள கொடுமை ஜார்கண்ட மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

TNN 25 Sep 2016, 9:03 am
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு வெறும் தரையில் மருத்துவமனை ஊழியர்கள் உணவளித்துள்ள கொடுமை ஜார்கண்ட மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil floor is the meal plate for patient in ranchi
நோயாளிக்கு தரையில் சாப்பாடு போட்ட மருத்துவமனை..!


ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னிதேவி என்ற பெண் மனநலம் சரியில்லாதவர்.ஒரு விபத்தில் சிக்கிய அவர், சிகிச்சை பெறுவதற்காக அம்மாநில தலைநகரான ராஞ்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்படார்.

இந்நிலையில் முன்னி தேவி தனக்கு உணவு வேண்டும் என மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.மனநலம் சரியில்லாதவர்தானே என மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு சரிவர பதிலளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.

ஆனால் பசி காரணமாக முன்னிதேவி தொடர்ந்து உணவு கேட்டு வர,தங்களிடம் தட்டு இல்லை எனவே தரையில் சோறு போடுகிறேன் என கூறி மருத்துவமனை அறையின் தரையில் உணவை போட்டுள்ளனர்.மனநிலை சரியில்லாத காரணத்தால் இது குறித்தெல்லாம் கவலைப்படாத முன்னிதேவி,தரையில் போடப்பட்ட உணவை உண்டுள்ளார்.

இந்த காட்சியை அருகில் இருந்த ஒருவர் படம்பிடித்து சமூக வளைதளங்களில் வெளியிட்டதை தொடர்ந்து,மருத்துவமனை நிர்வாகம் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

அடுத்த செய்தி