ஆப்நகரம்

2018ல் நாம் ஆன்லைனில் ஆர்டர் செய்து விரும்பி சாப்பிட்ட உணவு இதுதான்..!

2018ம் ஆண்டில் ஸ்விகி, சோமாட்டோ, உபேர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்களிடம் ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகிறோம். இந்தாண்டு அவ்வாறு எந்த உணவுகளை இந்தியர்கள் அதிகம் சாப்பிட்டுள்ளோம். என அந்நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 24 Dec 2018, 12:36 pm
2018ம் ஆண்டு இந்தியாவில் மிக பெரிய அளவில் வளர்ந்த தொழில் என்றால் அது ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் பெற்று அதை டெலிவரி செய்த நிறுவனங்கள் தான். இந்தியாவில் ஸ்விகி, சோமாட்டோ, உபேர் ஈட்ஸ் என பல நிறுவனங்கள் இந்த தொழிலில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர். அந்த அளவிற்கு ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் நம் வழக்கில் அதிகரித்துள்ளது.
Samayam Tamil online foods


அந்த வகையில் இந்தாண்டு இந்தியாவில் மிக அதிகமாக இந்தியர்கள் ஆன்லைனில் விரும்பி ஆர்டர் செய்து சாப்பிட உணவுகள் குறித்து ஸ்விகி மற்றும் உபேர் நிறுவனங்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர. உபேர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியர்கள், இந்திய உணவு வகைகளையே அதிகம் ஆர்டர் செய்வதாகவும் அதற்கு அடுத்தபடியாக சைனீஸ், இத்தாலியன்,அமெரிக்கன் மற்றும் மத்திய கிழக்கு உணவு வகைகளை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

அதிகமாக ஆர்டர் செய்த நகரங்களில் பட்டியலில் ஐதராபாத், டில்லி, சென்னை உள்ளிட்ட நகரங்கள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

ஸ்விகி நிறுவனம் வழங்கிய StatEATistics 2018 அறிக்கையின் படி ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுப்பதில் பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் தான் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. இந்த நகரங்களில் மக்கள் அதிகமாக குளிர்பானங்களை ஆர்டர் செய்யாமல் பழச்சாறுகளை ஆர்டர் செய்ததாக தெரிவித்துள்ளது.

ஆமதாபாத், சண்டிகர், டில்லி, லக்னோ, மும்பை, ஆகிய நகரங்களில் மக்கள் வறுத்த கோழியையும், ப்ரூட் சாலட்களையும், ஆதிகமாக ஆர்டர் செய்துள்ளார்களாம்.

ஸ்விகி நிறுவனம் கடந்தாண்டு விற்பனை செய்த மொத்த உணவுகளில் 43 சதவீத உணவுகள் சைவ உணவுகள் எனவும் இந்தாண்டு அது 62 சதவீதமாக உயர்ந்தள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சைவ உணவுகளை ஆர்டர் செய்வதில் ஆமதாபாத் நகரமும் முதலிடத்திலும், அசைவ உணவுகளை ஆர்டர் செய்வதில் ஐதராபாத் நகரம் முதலிடத்திலும் உள்ளது.

அடுத்த செய்தி