டெல்லி: சிறுவயதில் பாகிஸ்தானிலிருந்து ஓடிவந்த சிராஜ் கான் என்ற நபர், 23 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் உள்ள குடும்பத்திலிருந்து பிரித்து மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சிராஜ் கான் என்ற நபர், தனது 10 வயதில் பள்ளி தேர்விற்கு பயந்து வீட்டை விட்டு ஓடி இருக்கிறார். அங்கிருந்து, கராச்சியில் உள்ள தனது மாமா வீட்டிற்கு செல்ல ரயில் ஏற முயற்சித்து, இந்தியாவின் அமிர்தசரஸிற்கு செல்லும் ரயிலில் தவறுதலாக ஏறியுள்ளார்.
பின்னர், இந்தியாவின் அமிர்தசரஸில் வந்து இறங்கிய சிராஜ், அங்கிருந்து மும்பை சென்றுள்ளார். மும்பையில் ஒரு கடையில் சர்வர் வேலை வாங்கி, அப்படியே மும்பையில் தனக்கென ஒரு வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளார். அதன்பின், மும்பையைச் சேர்ந்த சாஜிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து, மூன்று குழந்தைகளுடன் அண்டோப் ஹில் பகுதியில் குடும்பமாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு அவரின் குடியுரிமை குறித்த பிரச்சனை எழுந்துள்ளது. இதனை, தன்னார்வ ஆர்வலர் ஒருவர் உதவியுடன் சட்டப்பூர்வமாக எதிர்கொண்டுள்ளார். ஆனால், அதில் அவர் தோல்வியடைந்தால், கடந்த திங்கட்கிழமை அவரை மீண்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போனில் பதிலளித்த சிராஜ் கான், “தான் ஒரு பிரபலமாக இருந்திருந்தால், உள்துறை அமைச்சரே வீடு தேடி வந்து எனக்கு குடியுரிமை வழங்கியிருப்பார். நான் 23 ஆண்டுகள் இந்தியாவில் இருந்துள்ளேன். என் மீது எவ்வித குற்ற வழக்கும் கிடையாது. எனது மனைவியும், குழந்தைகளும் என்னுடன் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை” என அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், எல்லை தாண்டும் போது இந்திய வீரர்கள் தன்னை இனிமேல் இந்தப் பக்கம் திரும்பி வரக்கூடாது என எச்சரித்ததாகவும், பாகிஸ்தானில் எனது ஆவணங்களை சரிபார்த்த பின் மீண்டும் தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சிராஜ் கான் என்ற நபர், தனது 10 வயதில் பள்ளி தேர்விற்கு பயந்து வீட்டை விட்டு ஓடி இருக்கிறார். அங்கிருந்து, கராச்சியில் உள்ள தனது மாமா வீட்டிற்கு செல்ல ரயில் ஏற முயற்சித்து, இந்தியாவின் அமிர்தசரஸிற்கு செல்லும் ரயிலில் தவறுதலாக ஏறியுள்ளார்.
பின்னர், இந்தியாவின் அமிர்தசரஸில் வந்து இறங்கிய சிராஜ், அங்கிருந்து மும்பை சென்றுள்ளார். மும்பையில் ஒரு கடையில் சர்வர் வேலை வாங்கி, அப்படியே மும்பையில் தனக்கென ஒரு வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளார். அதன்பின், மும்பையைச் சேர்ந்த சாஜிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து, மூன்று குழந்தைகளுடன் அண்டோப் ஹில் பகுதியில் குடும்பமாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு அவரின் குடியுரிமை குறித்த பிரச்சனை எழுந்துள்ளது. இதனை, தன்னார்வ ஆர்வலர் ஒருவர் உதவியுடன் சட்டப்பூர்வமாக எதிர்கொண்டுள்ளார். ஆனால், அதில் அவர் தோல்வியடைந்தால், கடந்த திங்கட்கிழமை அவரை மீண்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போனில் பதிலளித்த சிராஜ் கான், “தான் ஒரு பிரபலமாக இருந்திருந்தால், உள்துறை அமைச்சரே வீடு தேடி வந்து எனக்கு குடியுரிமை வழங்கியிருப்பார். நான் 23 ஆண்டுகள் இந்தியாவில் இருந்துள்ளேன். என் மீது எவ்வித குற்ற வழக்கும் கிடையாது. எனது மனைவியும், குழந்தைகளும் என்னுடன் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை” என அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், எல்லை தாண்டும் போது இந்திய வீரர்கள் தன்னை இனிமேல் இந்தப் பக்கம் திரும்பி வரக்கூடாது என எச்சரித்ததாகவும், பாகிஸ்தானில் எனது ஆவணங்களை சரிபார்த்த பின் மீண்டும் தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.