ஆப்நகரம்

மாமனாருடன் உடலுறவில் ஈடுபட வேண்டும்: வரதட்சணை கொடுமையின் உச்சக்கட்டம்!

மாமனாருடன் புணர வேண்டும் என்று கணவனே அவன் மனைவியை கட்டாயப்படுத்திய சம்பவம் அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

TNN & Agencies 7 Nov 2017, 12:31 pm
மாமனாருடன் புணர வேண்டும் என்று கணவனே அவன் மனைவியை கட்டாயப்படுத்திய சம்பவம் அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.
Samayam Tamil for heir man forces wife to sleep with his father doctor
மாமனாருடன் உடலுறவில் ஈடுபட வேண்டும்: வரதட்சணை கொடுமையின் உச்சக்கட்டம்!


அகமதாபாத்தில் வாழ்ந்து வரும் பெண் நிக்கீஷ் கிரி என்ற நபரை திருமணம் செய்துகொணடார். திருமணத்தின்போது கேட்ட வரதட்சணையை கொடுக்காதால், அந்தப் பெண்ணுடன் வாழ முடியாது என்று நிக்கீஷ் கூறினார்.

மேலும் கணவன் நிகேஷ் கிரி, தன் மனைவியை அனில் யாதவ் என்ற மருத்துவரிடம் புணரவேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தன் கணவன் மீது காவல் நிலையத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த சம்பவம் குறித்து , அகமதாபாத் உதவி ஆணையாளர் பன்னா மொமையா கூறியதாவது :

‘பாதிக்கப்பட்ட பெண்ணை அதிகப்படியான பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியுள்ளர். அவரது கணவர் அவரின் உடல் எங்கும் தொடுவார் . ஆனால் புணரமாட்டார். அவர் அந்த பெண்ணை தொட்ட பிறகு . அந்த அறையில் இருந்து வெளியேறுவார்.

அதன்பிறகு மருத்துவர் அனில் யாதவை அறைக்குள் அனுப்பிவைப்பார். அந்த மருத்துவர் தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு அவளை வற்புறுத்துவார். ஆனால் அதற்கு அந்தப் பெண் ஒருபோதும் சம்மதித்ததில்லை .

இப்படி பல முறை நடந்திருக்கிறது. அதேபோல் அவள் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவள் அறைக்கு மாமானார் வருவாராம். . அவளின் அந்தரங்கள் இடங்கள் கட்டாயப்படுத்தி தொடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தன்னை காப்பாற்றிக்கொள்ள பல முயற்சிகளை அந்த பெண் எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

கொடுமை தாங்க முடியாமல் அந்தப் பெண் அவரது குடும்பத்திடம் விஷயத்தை சொல்ல, பெண்ணின் தந்தைநியாயம் கேட்பதற்காக அவர்கள் வீட்டுக்கு சென்றிருக்கிறார். ஆனால் அந்தப் பெண்ணையும் அவரது தந்தையையும் கணவனின் குடும்பத்தினர் அவமானபடுத்தி அனுப்பிவைத்திருக்கின்றனர்.

அதேபோல் அந்தப் பெண் கட்டாயமாக விவாகரத்து கொடுத்தே ஆக வேண்டும் என்று மிரட்டவும் செய்தனர்.

இதுதொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பெயரில் ,அவரது கணவர் நிக்கீஷ் கிரி என்பவருக்கு காவல்துறைனர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

for heir, man forces wife to sleep with his father, doctor

அடுத்த செய்தி