ஆப்நகரம்

வாலிபால் களத்தில் கலக்கிய ‘வாலிபர்’ வைகோ!

மதிமுக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்திற்காக கரூர் சென்ற அக்கட்சியின் பொதுசெயலாளர் வைகோ மாவட்ட விளையாட்டு மைதானத்திற்குச் சென்று வாலிபால் விளையாடி அசத்தினார்.

TNN 20 Aug 2017, 11:46 am
கரூர்: மதிமுக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்திற்காக கரூர் சென்ற அக்கட்சியின் பொதுசெயலாளர் வைகோ மாவட்ட விளையாட்டு மைதானத்திற்குச் சென்று வாலிபால் விளையாடி அசத்தினார்.
Samayam Tamil for vaiko fitness matters more than politics
வாலிபால் களத்தில் கலக்கிய ‘வாலிபர்’ வைகோ!


மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 17ஆம் தேதி கரூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக முந்தைய தினமே கரூர் சென்று தங்கினார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ.

அன்று மாலை நடைப்பயணமாக மாவட்ட விளையாட்டு மைதானம் வரை சென்ற வைகோ அங்கே இளைஞர்கள் வாலிபால் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார். அவர்கள் விளையாட பயன்படுத்திய வாலிபால் நெட் கிழிந்திருந்ததை கவனித்த அவர் மறுநாளும் அதே மைதானத்திற்கு வந்து விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களுக்கு புதிய நெட்டை பரிசாகக் கொடுத்தார்.



பின்னர், இளைஞர்களுடன் சேர்ந்து சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக வாலிபால் விளையாடி அசத்தினார். பின்னர், அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

கட்சிப் பணியை கவனிக்க வந்த இடத்தில் சிறுபிள்ளைத்தனமாக விளையாட்டில் இறங்கிவிட்டதற்காக சில தீவிரத் தொண்டர்கள் அவரிடம் நாசூக்காக கடிந்துகொண்டார்கள். அதை எல்லாம் அசால்ட்டாக தவிர்த்துவிட்டாராம் வாலிப வைகோ!

அடுத்த செய்தி