ஆப்நகரம்

ஐந்து நட்சத்திர விடுதியில் அத்துமீறிய இளைஞர்கள்..!

பெங்களூருவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TNN 26 Jun 2016, 3:06 pm
பெங்களூருவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil four arrested for women guest in five star hotel
ஐந்து நட்சத்திர விடுதியில் அத்துமீறிய இளைஞர்கள்..!


21 வயதான பெண் ஐடி நிறுவன ஊழியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர்கள் மீது இந்திரா நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டுள்ள நான்கு இளைஞர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதற்கு முன்னரும் அந்த ஹோட்டலுக்கு வந்த பல்வேறு பெண்களிடம் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.


இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களில் இந்த பெண் மட்டுமே காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதன் பின்னரே இந்த சம்பவம் வெளியில் தெரிந்துள்ளது.அதிக அளவில் மது அருந்திவிட்டு, இது போன்ற பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதை இந்த இளைஞர்கள் வழக்கமாக கொண்டிருந்ததாகவும் காவல் துறை விசாரணையின் போது அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி