ஆப்நகரம்

ராமநாதபுரத்தில் மரத்தில் கார் மோதி விபத்து: 2 பெண்கள் உட்பட 4 பேர் பலி!

ராமநாதபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மரத்தில் மோதிய விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Sep 2018, 6:34 am
ராமநாதபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மரத்தில் மோதிய விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ramanadhapuram accident


ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் முத்துராமன். இவருடைய அந்தோணிராஜ், அதே பகுதியில் காண்ட்ராக்ட் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், இவர்களது உறவினர் ஒருவர் உடல்நலக்குறைவால் இருக்க, அவரை பார்க்க முத்துராமன் குடும்பத்தினர் காரில் புறப்பட்டனர். காரை அந்தோணிராஜ் ஓட்டி வந்தார். அப்போது உச்சிப்புளி அருகேயுள்ள வட்டான்வலசையில் கார் சென்றுக் கொண்டிருக்கும் போது திடீரென்று கட்டுபாட்டை இழந்தது. இதனால், சாலை ஓரத்தில் காரை நிறுத்த அந்தோணிராஜ் முயற்சித்தார். ஆனால், கார் வேகம் குறையாததால், நேராக மரத்தில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காரில் இருந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உச்சிப்புளி போலீசார், விபத்தில் உயிரிழந்த அந்தோணிராஜ்,முத்துராமன் மற்றும் இரண்டு பெண்களின் உடல்களை மீட்டு பிரதே பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தோணிராஜூக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி