ஆப்நகரம்

புதுமணத் தம்பதிக்கு 5லி பெட்ரோல் கேனை பரிசாக வழங்கிய நண்பர்கள்!!

கடலூரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், புதுமணத் தம்பதிக்கு நண்பர்கள் 5லி பெட்ரோல் கேனை பரிசாக வழங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

Samayam Tamil 16 Sep 2018, 4:29 pm
கடலூரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், புதுமணத் தம்பதிக்கு நண்பர்கள் 5லி பெட்ரோல் கேனை பரிசாக வழங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
Samayam Tamil புதுமணத் தம்பதிக்கு 5லி பெட்ரோல் கேனை பரிசாக வழங்கிய நண்பர்கள்!!
புதுமணத் தம்பதிக்கு 5லி பெட்ரோல் கேனை பரிசாக வழங்கிய நண்பர்கள்!!


முன்பெல்லாம் பெட்ரோல் விலை, எப்போதாவது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் ஏறும், அல்லது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்து குறையவும் செய்யும்.

ஆனால் இப்போது, பெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கலாம் என்பதால், சிறிது சிறிதாக உயர்த்தி, தற்போது வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அனுதினமும் அல்லல்பட்டு வருகின்றனர். இதற்கு பதிலளிக்க வேண்டிய மத்திய அரசோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதித்து வருகிறது.

இந்நிலையில், கடலூரில் நடைபெற்ற திருமண விழாவில், புதுமணத் தம்பதிக்கு நண்பர்கள் 5லி பெட்ரோல் கேனை பரிசாக வழங்கியுள்ளனர். பொதுவாக, திருமண விழாவில் தங்கம் வெள்ளி என விலையுயர்ந்த பொருட்களைப் பரிசாகத் தருவார்கள். ஆனால், இப்போதைய நிலைமைக்கு பெட்ரோல்தான் விலையுயர்ந்த பொருள் என்பதால்,எ அதையே பரிசாக வழங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி