ஆப்நகரம்

Trichy: ஒரு கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பல்!!

மர்ம கும்பல் ஒன்று, ​சென்னையில் இருந்து திருச்சி வந்த இருவரிடமிருந்து ரூ.1 கோடி பணப்பையைத் திருடிச் சென்றுள்ளது.

Samayam Tamil 27 Oct 2018, 6:07 pm
Read In English
Samayam Tamil ஒரு கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பல்!!
ஒரு கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பல்!!

சென்னையில் இருந்து திருச்சி வந்த இருவரிடமிருந்து, மர்ம கும்பல் ஒன்று ரூ.1 கோடி பணப்பையைத் திருடிச் சென்றுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த சுந்தரேசன் மற்றும் மதியழகன் இருவரும், சென்னையிலிருந்து திருச்சிக்கு பேருந்தில் வந்துள்ளனர். அவர்களிடம் சென்னையைச் சேர்ந்த பைனான்சியர் ஒருவர், ரூ.1 கோடியை திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு, கொடுத்தனுப்பியுள்ளார்.

அந்தப் பணத்துடன் திருச்சி வந்து இறங்கிய அவர்கள், அங்குள்ள தலைமை தபால் நிலையத்திற்கு அருகே நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று, அவர்கள் வைத்திருந்த ரூ.1 கோடி பணப்பையை அவர்களிடம் இருந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

இதைத் தொடர்ந்து சுந்தரேசன் மற்றும் மதியழகன் இருவரும், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் துறையினருக்கு தடயம் கிடைத்துள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அவ்வளவு பெரிய தொகையை பேருந்தில் எடுத்து வந்தது காவல்துறையினர் இடையே மிகவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்