ஆப்நகரம்

காதலை தூக்கி எறிந்த காதலன்; இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி!

இளம்பெண் மீது கைவிடப்பட்ட காதலன் பெட்ரோல் ஊற்றி, கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 25 Sep 2017, 11:03 am
ஜெய்ப்பூர்: இளம்பெண் மீது கைவிடப்பட்ட காதலன் பெட்ரோல் ஊற்றி, கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil girl allegedly set on fire by jilted lover in banswara
காதலை தூக்கி எறிந்த காதலன்; இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி!


ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் சாதர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்(18), அதே பகுதியைச் சேர்ந்த ரவி(23) என்பவரை காதலித்துள்ளார்.

இந்நிலையில் ரவி வீட்டிற்கு வெளியே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து சிறிது நேரத்தில் இளம்பெண் கதறும் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்துள்ளனர்.

அப்போது பெண்ணின் மீது தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தீயை அணைத்து, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதில் இளம்பெண்ணின் நிலை மிக மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பெண்ணின் மீது ரவி பெட்ரோல் ஊற்றியதாக தெரியவந்துள்ளது.

ஆனால் அவர் தீ வைத்ததாக இளம்பெண் கூறவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவி மீது போதிய ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

Girl allegedly set on fire by jilted lover in Banswara.

அடுத்த செய்தி