ஆப்நகரம்

சிறுமி கொலை, வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

மானாமதுரை அருகே 6ம் வகுப்பு படிக்கும் சிறுமியை கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TNN 12 Jul 2016, 4:19 pm
சிவகங்கை:மானாமதுரை அருகே 6ம் வகுப்பு படிக்கும் சிறுமியை கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil girl murdred youth try to suicide
சிறுமி கொலை, வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி


மானாமதுரையைச் சேர்ந்தவர் ஜெயா. இவர் தனது மகள் காளிஸ்வரியுடன்(11) வசித்து வந்தார். காளிஸ்வரி அருகிலுள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

திங்களன்று காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற காளிஸ்வரி, மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயா ,பள்ளி மற்றும் கிராமத்தின் பல பகுதிகளில் தனது மகளை தேடியுள்ளார்.

காளிஸ்வரி அவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் டிரைவர் கார்த்திக்குடன் பைக்கில் சென்றதாக ஜெயாவுக்கு தகவல் கிடைத்தது. செல்போன் மூலம் கார்த்திக்கை தொடர்பு கொண்டார் ஜெயா. அப்போது பேசிய கார்த்திக், தான் தான் காளிஸ்வரியை கடத்திச் சென்று கொன்று விட்டதாக கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயா மானா மதுரை போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை போலீசார் தேடிவந்தனர். அப்போது கண்மாய்க்கு அருகே கார்த்திக் கழுத்து அறுப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் கார்த்திக்கை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.மேலும் காளிஸ்வரியின் உடலானது கண்மாய்க்கு அருகில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் இரவு முழுவதும் தேடி அந்த சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபித்து உடலை மீட்டனர்.

இதனிடையே கார்த்திக் , காளிஸ்வரியை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை வேறு யாரும் கொலை செய்ய முயன்றனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி