ஆப்நகரம்

சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை..!

வேலூரில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு மர்ம நபர் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

TNN 6 Mar 2017, 9:11 pm
வேலூரில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு மர்ம நபர் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil girl playing outside her home sexually abused by stranger
சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை..!


இன்று காலை வேலூரைச் சேர்ந்த சிறுமி தன்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ள ஆட்டோ ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி,அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

இதன் பின்னர் தன்னுடைய தாயிடம் வந்த அந்த சிறுமி,தனக்கு பிறப்புறுப்பில் வலி எடுப்பதாக கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து சிறுமியை அவரது தாய் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த பின்னர்தான்,சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு நடந்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில்,அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர்.

Girl playing outside her home sexually abused by stranger

அடுத்த செய்தி