ஆப்நகரம்

அன்று மகாபாரத பாண்டு; இன்று வேட்டைக்காரர்கள்

மாகாபாரத கதையில் வரும் பாண்டு, ரிஷி கிண்டாமாவை, மான் என நினைத்து அம்பை எய்து கொன்றது போல, சீனாவில் ஒன்பது வயது சிறுமியை வேட்டைக்காரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

TNN 20 Aug 2016, 2:42 am
பீய்ஜிங்: மாகாபாரத கதையில் வரும் பாண்டு, ரிஷி கிண்டாமாவை, மான் என நினைத்து அம்பை எய்து கொன்றது போல, சீனாவில் ஒன்பது வயது சிறுமியை வேட்டைக்காரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
Samayam Tamil girl shot dead by mistook of rabit three arrest
அன்று மகாபாரத பாண்டு; இன்று வேட்டைக்காரர்கள்


சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில், பண்ணை நிலம் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, அப்பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்த மூன்று தங்களது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சுட்டவுடன் அருகில் சென்று பார்த்தபோது, சிறுமி ரத்த வெள்ளதில் கிடப்பது கண்டு, அங்கிருந்து அவர்கள் மூவரும் தப்பி ஓடிவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை, அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், வேட்டைக்காரர்கள் மூன்று பேர் போலீசாரிடம், குற்றதை ஒப்புக் கொண்டு சரணடைந்துள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், முயல் என சிறுமியை தவறுதலாக நினைத்து சுட்டு விட்டோம் என கூறியுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி