ஆப்நகரம்

நீதி கேட்டு போராடிய மாணவி; ஆண்கள் கழிவறையை பயன்படுத்த வற்புறுத்திய கொடுமை...!

நீதி கேட்டு போராடியை மாணவியை, ஆண்கள் கழிவறையை பயன்படுத்த வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 17 Jul 2017, 4:03 pm
கொல்கத்தா: நீதி கேட்டு போராடியை மாணவியை, ஆண்கள் கழிவறையை பயன்படுத்த வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil girl student of presidency denied entry in ladies toilet
நீதி கேட்டு போராடிய மாணவி; ஆண்கள் கழிவறையை பயன்படுத்த வற்புறுத்திய கொடுமை...!


மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர் ரித்திபிராதா சாஹா என்ற பெண் மூன்றாமாண்டு பயின்று வருகிறாள். இந்நிலையில் அவருக்கு பதிவேட்டில் 75% வருகை இல்லாததால், இறுதி தேர்விற்கு அனுமதிக்கப்படவில்லை.

இதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை, துணைவேந்தரை நேரில் சென்று சந்திக்குமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் விதிமுறைகளின்படி அது தவறு என்று கூறி, தன்னை தேர்விற்கு அனுமதிக்க வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் 6வது நாளாக போராடி வரும் அவரை, பெண்கள் கழிவறையை பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.

மேலும் ஆண்கள் கழிவறையை பயன்படுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டதற்கு, அவர்கள் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

Girl student of Presidency denied entry in ladies' toilet!

அடுத்த செய்தி