ஆப்நகரம்

மதுரை மக்களே உஷார்; மின்னல் வேக செயின் பறிப்பு சம்பவங்கள்; ரூ.4.4 லட்சம் நகைகள் அபேஸ்!

இரண்டு வெவ்வேறு செயின் பறிப்பு சம்பவங்களில் ரூ.4.4 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

TNN 24 Nov 2017, 12:51 am
மதுரை: இரண்டு வெவ்வேறு செயின் பறிப்பு சம்பவங்களில் ரூ.4.4 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil gold jewellery snatched from two women in madurai
மதுரை மக்களே உஷார்; மின்னல் வேக செயின் பறிப்பு சம்பவங்கள்; ரூ.4.4 லட்சம் நகைகள் அபேஸ்!


மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த சுசிலா(58), வீட்டில் இருந்து வண்டியூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பின் தொடர்ந்தனர்.

பிடிஆர் பாலத்தை கடக்கும் போது, சுசிலாவின் கழுத்தில் இருந்த 15 சவரன் செயின் மற்றும் 2 சவரன் நெக்லஸை பறித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஜிஎஸ்டி சாலையில் பசுமலை பகுதியில் காமாட்சி(47) சென்று கொண்டிருந்தார். இவர் தெற்கு வெலி தெருவைச் சேர்ந்தவர். தனது உறவினர் வீட்டிற்கு செல்லும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 5 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர் செயின் பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Gold jewellery snatched from two women in Madurai.

அடுத்த செய்தி