ஆப்நகரம்

அரசு பேருந்து-லாரி மோதியதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்

Samayam Tamil 10 Feb 2019, 1:01 pm
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்
Samayam Tamil vlcsnap-2019-02-10-12h57m09s761


வேலூரில் இருந்து லாரி வாணியம்பாடி நோக்கி இரும்பு கம்பிகளை ஏற்றி கொண்டு சென்றது விடியற்காலை வேலூரிலிருந்து - திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து முன்னால் சென்ற இரும்பு கம்பி ஏற்றிய லாரியின் மீது மோதியது இதில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் உடனடியாக இவர்கள் மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விடியற்காலை நடைபெற்ற இந்த விபத்து ஓட்டுநர் தூக்கத்தில் இருந்ததால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது

வேலூரில் நேற்றிரவு அரப்பாக்கம் அருகே நடந்த விபத்தில் 2பேர் பலியானார்கள் 2 பேர் படுகாயமடைந்தனர் ஆம்பூரில் அரசு பேருந்து விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது இதனை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

அடுத்த செய்தி