ஆப்நகரம்

திருப்பூரைச் சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தற்கொலை!!

நகத்தால் அதிக எடையைத் தூக்கி கின்னஸ் சாதனை படைத்த, திருப்பூரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Samayam Tamil 26 Oct 2018, 5:07 pm
விரல் நகத்தால் அதிக எடையைத் தூக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த, திருப்பூரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Samayam Tamil திருப்பூரைச் சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தற்கொலை!!
திருப்பூரைச் சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தற்கொலை!!


திருப்பூர் மாவட்டம் நல்லூரைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன். இவர் கடந்த ஆண்டு தனது விரல் நகத்தால், சுமார் 22.5 கிலோ எடையைத் தூக்கி சாதனைப் படைத்தார். இதன்மூலம், இவர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்தார்.

இதையடுத்து, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விளையாட்டு போட்டியிலும் பங்கேற்றார். அப்போது, தனது மூக்கில் 2 இன்ச் டிரில் மெஷினை இயக்கியும் சாதனைப் படைத்தார்.

இந்நிலையில், அவர் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருமணமாகி 11 மாதங்களே ஆகும் நிலையில், அவரின் இந்த திடீர் முடிவு பலரையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்