ஆப்நகரம்

நாட்டிலேயே முதலாவதாக குஜராத் ரேஷன் கடைகள் டிஜிட்டல்மயம்

நாட்டிலேயே முதலாவதாக குஜராத் மாநிலத்தின் பொது விநியோக முறை முற்றிலும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளது.

TNN 9 Feb 2017, 12:18 pm
காந்திநகர்: நாட்டிலேயே முதலாவதாக குஜராத் மாநிலத்தின் பொது விநியோக முறை முற்றிலும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil gujarats ration shops go digital
நாட்டிலேயே முதலாவதாக குஜராத் ரேஷன் கடைகள் டிஜிட்டல்மயம்


குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ரொக்கமில்லா பணபரிவர்த்தனைக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஆதார் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அம்மாநில அரசு மார்ச் 31ஆம் தேதிக்குள் பொது விநியோக முறையை மின்மயக்கமாக்க திட்டமிட்டது. ஆனால், அதற்கு முன்பே அத்திட்டத்தை நிறைவு செய்துள்ளது.

இதுபற்றி நேற்று பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், இனி குஜராத் மாநில மக்கள் ரேஷன் கடைகளுக்கு ஆதார் அட்டையை மட்டுமே எடுத்துச்சென்று பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார். இதன் மூலம் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆதார் எண்ணும் வங்கிக்கணக்கும் இணைக்கப்பட்டுவிட்டதால் ஆதார் எண்ணை மட்டுமே கொண்டு ரொக்கமில்லா பரிவர்த்தனையைச் செய்யமுடியும். இதன் மூலம் ரேஷன் கடையில் பணம் செலுத்துவது மட்டுமின்றி மொத்தம் 30 வகையான மின் சேவைகள் அளிக்கப்படுகின்றன. மொபைல் ரீசார்ஜ், ரயில், பேருந்து மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு, எல்.ஐ.சி. காப்பீட்டுத் தவணை செலுத்துவது என்று பல தேவைகளுக்கு இந்த ஆதார் வழி ரொக்கமில்லா பரிவரத்தனையைப் பயன்படுத்தலாம்.

அடுத்த செய்தி