ஆப்நகரம்

காரில் ராங் சைடில் வந்தவர் செய்த "ராங்"கான விஷயம் - வைரலாகும் வீடியோ!

குர்கானில் ராங்சைடில் வந்த காரை நிறுத்த முயன்ற போலீசார் மீது காரை மோதி அவர் பானட்டில் விழுந்த போதும் காரை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டி சென்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 20 Dec 2018, 10:44 am

ஹைலைட்ஸ்:

  • குர்கானில் ராங் சைடில் வந்த காரை நிறுத்த முயன்ற டிராபிக் போலீஸ் மீது கார் மோதல்
  • கார் மெதுவாக மோதியதால் காரின் பானட்டில் போலீசார் விழந்தார் இருந்தும் கார் நிற்காமல் சென்றது.
  • இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil police
ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள சிக்னல் டவர் சவுக் என்ற பகுதியில் ராங் சைடில் ஒருவர் காரை ஒட்டி வந்துள்ளார். அப்பொழுது அங்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பணியில் இருந்த போலீசார் ஒருவர் ராங்சைடில் வந்த காரை நிறுத்த ரோட்டின் குறுக்கே சென்று கையை காட்டியுள்ளார்.
அதை பொருட்படுத்தாமல் காரில் வந்தவர் காரை அந்த போலீஸ்காரர் மீது மோதினார். அதிர்ஷ்டவசமாக கார் மெதுவாக வந்ததால் அந்த போலீஸ்காரர் காரின் பானட் மீது மட்டுமே விழுந்தார். ஆனால் அப்பொழுதும் காரில் வந்தவர் காரை நிறுத்தவில்லை தொடர்ந்து காரை நகர்த்தி கொண்டே இருந்தார்.

இதனால் பானட்டில் விழுந்த போலீஸ்காரர் தான் கீழே விழாமல் இருப்பதற்காக பானட்டை இருக்கமாக பிடித்துக்கொண்டார். இவர்கள் இப்படியே சிறிது தூரம் பயணிக்க ஒரு கட்டத்தில் கார் நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தை முழுமையாக ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த செயலுக்காக காரில் வந்தவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் அவர் ஓட்டி வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவத்தை முழுமையாக செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இது குறித்த இணையதளங்களில் பலர் பல்வேறு விதமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி