ஆப்நகரம்

மனிதக்கழிவை விண்கல் என நம்பி பிரிட்ஜில் பத்திரப்படுத்திய கிராம மக்கள்!!

டெல்லி அருகே உள்ள குருகிராம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் விமானத்தில் இருந்து விழுந்த மனிதக்கழிவை விண்கல் என நினைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த சம்பவம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 23 Jan 2018, 6:51 pm
டெல்லி அருகே உள்ள குருகிராம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் விமானத்தில் இருந்து விழுந்த மனிதக்கழிவை விண்கல் என நினைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த சம்பவம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil gurugram villagers left disappointed after fallen meteor turned out to be frozen human poop
மனிதக்கழிவை விண்கல் என நம்பி பிரிட்ஜில் பத்திரப்படுத்திய கிராம மக்கள்!!


குருகிராம் அருகே உள்ள பாசில்பூர் பாடிலி கிராமத்தில், வானத்திலிருந்து 8 கிலோ எடை கொண்ட பொருள் ஒன்று வயல்வெளியில் விழுந்துள்ளது. இதனால் அப்பகுதில் ஒரு அடி பள்ளம் ஒன்றும் உண்டானது.

இதையடுத்து, இந்தச் செய்தி அக்கிராம மக்களிடையே காட்டுத் தீ போல் பரவியுள்ளது. இதைத் தொடர்ந்து, அக்கிராம மக்கள் அப்பகுதியில் குவியத் தொடங்கினர். ஒரு சிலர் அதை தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்று குளிர்சாதனப் பெட்டியிலும் வைத்துள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் அதன் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், அந்த பொருள் விமானத்திலிருந்து காய்ந்த நிலையில் விழுந்த மனிதக்கழிவு என்று கண்டறியப்பட்டது.

உண்மையை அறிந்த கிராம மக்கள், தாங்கள் எடுத்துச் சென்றவற்றை வீட்டிளிருந்து தூக்கி எறிந்து, தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி