ஆப்நகரம்

’காவல்நிலையத்தில் இளைஞர் தலை வீச்சு’: மூவர் கைது..!

கடலூர் காவல் நிலையத்தில் இளைஞரின் தலையை துண்டித்து வீசிச் சென்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 11 May 2017, 8:27 am
கடலூர் காவல் நிலையத்தில் இளைஞரின் தலையை துண்டித்து வீசிச் சென்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil guy beheaded in puducherry 3 accused arrested
’காவல்நிலையத்தில் இளைஞர் தலை வீச்சு’: மூவர் கைது..!


கடலூர் மாவட்டத்திலுள்ள ரெட்டி சாவடி காவல் நிலைய வாயிலுக்கு நேற்றிரவு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் , அவர்கள் வைத்திருந்த இளைஞர் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலையை காவல் நிலையத்தில் வீசிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த காவல் துறையினர் இது குறித்த விசாரணையை துவங்கினர்.

விசாரணையில் துண்டிக்கப்பட்ட தலை புதுச்சேரி மாநிலம் பாகூரைச் சேர்ந்த சுவேதன் என்பவருடையது என தெரியவந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட இளைஞர் சுவேதனின் தலை இல்லாத உடல் பகுதி புதுச்சேரியில் உள்ள பின்னாச்சி குப்பம் என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

துண்டிக்கப்பட்ட தலையை இருவர் பைக்கில் வந்து வீசிச் சென்றதால், இந்த கொடூர கொலையில் இரண்டு பேருக்கு மேல் சம்மந்தம் இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் வினோத், தாஸ் என்பவர்கள் உட்பட மூன்று இளைஞர்களை புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன் விரோதம் காரணமாக சுவேதனை கொலை செய்ததாக, முதல் கட்ட விசாரணையில் வினோத் தெரிவித்துள்ளார். ஆனால் கொலை செய்யப்பட்டதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்பதால் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட மூவரிடமும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Guy beheaded in Puducherry: 3 accused arrested

அடுத்த செய்தி