ஆப்நகரம்

"மத வெறியின் உச்சம்": முஸ்லீம் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு..!

இந்துக்கள் வாழும் பகுதியிலிருந்து வீட்டை காலி செய்ய மறுத்த முஸ்லீம் இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் ஹரித்வாரில் நடந்தேறியுள்ளது.

TNN 30 May 2017, 9:24 am
இந்துக்கள் வாழும் பகுதியிலிருந்து வீட்டை காலி செய்ய மறுத்த முஸ்லீம் இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் ஹரித்வாரில் நடந்தேறியுள்ளது.
Samayam Tamil haridwar girl says attacked with acid because of her faith
"மத வெறியின் உச்சம்": முஸ்லீம் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு..!


உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஜவால்பூரில் முஸ்லீம் இளம்பெண் ஒருவர், முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்து குடும்பங்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள இந்த பகுதியில், அந்த இளம்பெண்ணின் குடும்பம் மட்டுமே ஒரே முஸ்லீம் குடும்பமாகும். எனவே அவர்களை அந்த பகுதியிலிருந்து காலி செய்யுமாறு, இந்துக் குடும்பங்களைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் ராணுவ வீரரான சுதிர் சிங் தோமர் என்பவர், அந்த இளம்பெண் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டை காலி செய்யுமாறு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த இளம்பெண்,தனது தாயுடன் சென்று சுதிர் சிங் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அந்த முஸ்லீம் இளம்பெண், கல்லூரிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த சுதிர் சிங், அந்த இளம்பெண் மீது ஆசிட் வீசியுள்ளான். கடும் காயத்தினால் அலறித்துடித்த அந்த பெண்ணை, அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த பெண்ணின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த முஸ்லீம் குடும்பத்தினர், பொது நிலத்தை ஆக்கிரமித்து தங்களுடைய வீட்டை கட்டி வந்ததால், வீட்டை காலி செய்யுமாறு வலியுறுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள சுதிர் சிங் தோமர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளான்.

Haridwar girl says attacked with acid because of her faith

அடுத்த செய்தி