ஆப்நகரம்

தனியார் பள்ளியின் கொடூரம் : மாணவர்களை 500 முறை தோப்புகரணம் செய்ய வைத்த ஆசிரியை கைது!

கோல்ஹாபூரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியை 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை 500 முறை தோப்புக்கரணம்போடுமாறு தண்டனை வழங்கிய சம்பவம் பெற்றொர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 15 Dec 2017, 11:20 am
கோல்ஹாபூரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியை 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை 500 முறை தோப்புக்கரணம்போடுமாறு தண்டனை வழங்கிய சம்பவம் பெற்றொர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil headmistress makes child do 500 sit ups arrested
தனியார் பள்ளியின் கொடூரம் : மாணவர்களை 500 முறை தோப்புகரணம் செய்ய வைத்த ஆசிரியை கைது!


கோல்ஹாப்பூரில் உள்ள கானுர் பூதுருக் என்ற கிராமத்தில் பவேஸ்வரி சந்தீஷ் வித்யாலயா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அஷ்வினி தேவன் என்பவர் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்து வருகிறார் .
இவர் கடந்த நவம்பர் மாதம் தீபாவளி விடுமுறை முடிந்து வீட்டுப்பாடத்தை முடிக்காமால் வந்த 7 மாணவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கியுள்ளார். 7 மாணவர்களையும் 500 முறை தோப்புக்கரணம் போடுமாறு அவர் கூறியுள்ளார்.

இதில் ஒரு மாணவி 300 முறை தோப்புக்கரணம் போட்டவுடன் வலி தாங்காமல் மயக்கம் அடைந்துள்ளார். கோல்ஹாபூரில் உள்ள சத்ரபதி பிரமிலா ராஜே என்ற மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து மாணவர்களை கொடுமைப்படுத்திய தலைமை ஆசிரியை அஷ்வினி தேவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதேபோல் அவரது வங்கிகணக்கும் முடக்கப்பட்டுள்ளது. மாணவர்களை 500 முறை தோப்புகரணம் போடுமாறு தண்டனை வழங்கிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

அடுத்த செய்தி