ஆப்நகரம்

தாய் இறந்ததையும் அறியாத பிஞ்சு குழந்தை, காண்போரை கண் கலங்க வைக்கும் சம்பவம்

மத்திய பிரதேச மாநிலம், தாமோ மாவட்டத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பெண்மணி ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.

TNN 25 May 2017, 11:56 am
மத்திய பிரதேச மாநிலம், தாமோ மாவட்டத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பெண்மணி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். தனது தாய் இறந்தததையும் அறியாத அவரின் 17 மாத குழந்தை தாயின் மார்பில் பால்குடித்துள்ளது.
Samayam Tamil heartbreaking video shows a toddler sucking dead mothers milk
தாய் இறந்ததையும் அறியாத பிஞ்சு குழந்தை, காண்போரை கண் கலங்க வைக்கும் சம்பவம்


இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது, இன்று காலை ரயில் தண்டவாள ஓரத்தில் ஒரு பெண்மணி இறந்துகிடப்பதை சற்று தொலைவில் இருந்து பார்த்தோம், சற்று அருகில் நெருங்கி செல்கையில் அவருக்கு பக்கவாட்டில் அவரது குழந்தை பால்குடித்துக்கொண்டிருந்ததை பார்த்ததும் எங்கள் கண்களில் கண்ணீர் வந்தது.

அந்த பெண்ணின் மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வந்ததால், இது விபத்து என்று நினைக்கிறோம், பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை அனுப்பி வைத்துள்ளோம்.

தற்போது, குழந்தைக்கு சளி பிடித்துள்ளதால் பத்திரமாக கவனித்து வருகிறோம், விரைவில் அப்பெண்ணின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து தகவல் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தையை பாதுகாப்பாக ஒப்படைப்போம் என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி