ஆப்நகரம்

நிஜமான நரகம் இந்தியாவில் தான் இருக்கிறது.!

யானைகளுக்கு தீ வைக்கும், ஒரு கும்பலிடமிருந்து தப்பியோடும் இரண்டு யானைகளின் புகைப்படம் வனவிலங்கு புகைப்பட போட்டியொன்றில் முதல் பரிசை வென்றுள்ளது.

TNN 9 Nov 2017, 1:56 pm
யானைகளுக்கு தீ வைக்கும், ஒரு கும்பலிடமிருந்து தப்பியோடும் இரண்டு யானைகளின் புகைப்படம் வனவிலங்கு புகைப்பட போட்டியொன்றில் முதல் பரிசை வென்றுள்ளது.
Samayam Tamil hell is here picture of elephant calf set on fire by mob in west bengal wins top photography award
நிஜமான நரகம் இந்தியாவில் தான் இருக்கிறது.!


நரகம் இங்குதான் இருக்கிறது.!
மேற்குவங்கத்தின் பன்குரா மாவட்டத்தில் சில இரக்கமற்ற மனிதர்கள் தார் பந்துகளில் தீ மூட்டி வீசி எறிய; ஒரு தாய் யானையும் குட்டி யானையும் தீப்பற்றிய தேகத்தோடு தப்பி ஓடும் காட்சியை படமெடுத்த புகைப்படக்காரர் பிப்லா ஹசாரா, இந்த கோர சாட்சிக்கு வைத்த பெயர்தான் இது.

பிப்லா ஹசாரா, தனது புகைப்படத்தில் எழுதியிருப்பது பின்வருமாறு:
"தீயின் தாக்கதால் குட்டி யானை பிளிறிக் கொண்டு ஓடுவதும் குழப்பத்தில் தாய் யானை செய்வதறியாது சாலையைக் கடந்து ஓடுவதும் அந்த புகைப்படத்தில் காட்சியாக்கப்பட்டிருந்தது. யானையின் மெல்லிய தோல் தீயில் கருக அது வேதனையில் பிளிறுகிறது. நெருப்பு உருண்டைகள் காற்றில் வீசி எறியப்படுகின்றன. தூரத்தில் சில 'மனிதர்கள்' சிரிப்பும் கும்மாளமுமாக நிற்கின்றனர்" என்று பிப்லா இந்த படத்திற்க்கு விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக அரசின் கவுரவ வனவிலங்கு பாதுகாவலர் நீரட் முத்தன்னா கூறுகையில், பொதுவாக யானைகள் ஊருக்குள் அட்டகாசம் செய்கிறது என்றால் அதற்குக் காரணம் அது சந்தித்த இன்னலுக்கான பதிலடியாகவே இருக்கும் என்று கூறினார்.

ஆசிய யானைகளின் எண்ணிக்கையில் 70%-க்கும் மேலான யானைகள் இந்தியாவில்தான் இருக்கின்றன. மேற்குவங்கத்தில் மட்டும் சுமார் 700 யானைகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அடர்த்தியான வனங்களைக் கொண்ட வடக்கு பகுதியில் 600 யானைகள் இருக்கின்றன. தென் பகுதியில் 140 முதல் 150 யானைகள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி