ஆப்நகரம்

சாலையோரம் அனாதையாக கிடந்த ஆண் குழந்தை; காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்...!

சாலையோரம் அனாதையாக கிடந்த ஆண் குழந்தையை போலீசார் மீட்டனர்.

TNN 18 Jun 2017, 1:08 pm
தஞ்சை: சாலையோரம் அனாதையாக கிடந்த ஆண் குழந்தையை போலீசார் மீட்டனர்.
Samayam Tamil helpless child rescued by the police
சாலையோரம் அனாதையாக கிடந்த ஆண் குழந்தை; காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்...!


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் சாலையில், கடந்த 15ஆம் தேதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையில் சென்றிருந்தனர். அப்போது எங்கிருந்தோ குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே தீவிரம் காட்டிய போலீசார், அங்கிருந்த தியேட்டர் அருகே குழந்தை ஒன்று இருந்ததை கண்டறிந்தனர்.

ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தையை யாராவது கடத்தி வந்துள்ளனரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Helpless child rescued by the police.

அடுத்த செய்தி