ஆப்நகரம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த பைக் திருடர்கள் பெங்களூரில் கைது!!

பெங்களூரில் ஆடம்பர பைக்குகளைத் திருடியதாக தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரை பெங்களூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 7 Jul 2018, 5:40 pm
பெங்களூரில் ஆடம்பர பைக்குகளைத் திருடியதாக தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரை பெங்களூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil தமிழ்நாட்டைச் சேர்ந்த பைக் திருடர்கள் பெங்களூரில் கைது!!
தமிழ்நாட்டைச் சேர்ந்த பைக் திருடர்கள் பெங்களூரில் கைது!!


பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா, பண்டிபால்யா, HSR லேஅவுட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பைக்குகள் திருடுப் போவதாக, தென்கிழக்கு பெங்களூர் காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் வந்தது.

இதையடுத்து, இதுதொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்ட பெங்களூர் காவல்துறையினர், எரிடிகா கார் ஒன்றை நோட்டமிட்டனர். அந்த கார் மீது சந்தேகம் ஏற்படவே, அதில் பயணித்தவர்களைப் பிடித்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த முகமது முஜாஹித் (24), முஸ்தகின் (19), இஸ்தியாக் (25), நூர் முகமது (21) மற்றும் சுல்பிகர் அலி (20) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் பெங்களூரில் பல இடங்களில் பைக்குகளை திருடி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல்துறையினர் பிடிபட்ட அவர்களிடமிருந்து 15 ராயல் என்பீல்டு, 13 KTM டுயுக், 10 பஜாஜ் பல்சர், 7 யமாஹா ஆர்-15 உள்ளிட்ட பைக்குகளை கைப்பற்றியுள்ளனர்.

அடுத்த செய்தி