ஆப்நகரம்

1180 மதிப்பெண் எடுத்த பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

1180 மதிப்பெண் எடுத்த பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

TOI Contributor 24 May 2017, 4:44 am
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1180 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் இடத்தை பிடித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil high mark scored 12th student committed suicide in kerala
1180 மதிப்பெண் எடுத்த பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!


கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ரஃப்சினா எனும் மாணவி பிளஸ் 2 தேர்வில் 98.33 சதவீத மதிப்பெண்களை பெற்று பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இதனையடுத்து அங்குள்ள பத்திரிகைகள் அவரின் கடின உழைப்பு குறித்தும், குடும்ப நிலை குறித்தும் சாதனை கட்டுரையை வெளியிட்டனர். ரஃப்சினா தனது தாயுடன் ஒரே அறையில் வாழ்ந்தது முதல் அவரது தாய் கூலி வேலை செய்து அவரை படிக்க வைத்தது வரை கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.

இந்த செய்தியை படித்த கண்ணூர் எம்பி ரஃப்சினாவின் கல்லூரி படிப்பு செலவை தான் ஏற்றுக்கொள்வதாக கூறினார். இந்நிலையில் பத்திரிகையில் செய்தி வெளியானதால் தன் உடன் படித்த மாணவர்களுக்கு தன்னுடைய ஏழ்மை நிலை தெரிந்துவிட்டதாக மன வேதனை அடைந்த மாணவி ரஃப்சினா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி ரஃப்சினாவின் இந்த முடிவு பள்ளி மாணவர்கள் மற்றும் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி