ஆப்நகரம்

பெற்ற மகளை 6 ஆண்டுகளாக வன்புணர்வு செய்த கொடூர தந்தை!

புனேவில் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

TNN 14 Jan 2017, 3:32 pm
புனேவில் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil horror at home man booked for raping daughter
பெற்ற மகளை 6 ஆண்டுகளாக வன்புணர்வு செய்த கொடூர தந்தை!


அங்குள்ள காலேவாடி பகுதியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

அந்த நபர், தனது 12 வயது மகளை, கடந்த 6 ஆண்டுகளாக, தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ளார். அண்மையில் பூப்பெய்திய அவளை மீண்டும் வன்புணர்வு செய்ததில், அந்த சிறுமி கர்ப்பம் தரித்துவிட்டாள். இந்த சம்பவம் தெரியவந்த, அவளது தாய், இதுபற்றி மவுனமாக இருக்கவே, மனம் வெறுத்துப் போன சிறுமி, அருகாமை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் கேட்ட பிறகே, இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது.

இதையடுத்து, அந்த சிறுமியின் தாய் மற்றும் தந்தைய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பெற்ற மகளையே ஒருவர் தொடர்ந்து 6 ஆண்டுகள், அதுவும் சிறுமி என்றும் பார்க்காமல், வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PUNE: The Wakad police on Friday booked a resident of Kalewadi for allegedly raping his 12-year-old daughter for the past six years.

அடுத்த செய்தி