ஆப்நகரம்

தன்னை பலாத்காரம் செய்தவர்களை போலீஸிடம் பிடித்து கொடுத்த 8 வயது சிறுமி

மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி, தன்னை பலாத்காரம் செய்தவர்களை போலீஸார் கண்டுபிடிக்க உதவி செய்துள்ளார்.

TOI Contributor 24 Aug 2016, 5:28 pm
புதுடெல்லி : மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி, தன்னை பலாத்காரம் செய்தவர்களை போலீஸார் கண்டுபிடிக்க உதவி செய்துள்ளார்.
Samayam Tamil how 8 yr old braveheart led police to her rapists
தன்னை பலாத்காரம் செய்தவர்களை போலீஸிடம் பிடித்து கொடுத்த 8 வயது சிறுமி


கடந்த ஞாயிறு அன்று கிழக்கு டெல்லியின், மண்டாவலி பகுதியில், வீட்டிற்கு வெளியே படுத்திருந்த 8 வயது சிறுமியை மூன்று பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நிகழந்துள்ளது. இதற்கு காரணமான அந்த கும்பலை பாதிக்கப்பட்ட அந்த சிறுமியே அடையாளம் கண்டு, அவர்களை பிடிக்க போலீஸாருக்கு உதவி செய்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் அந்த சிறுமியும், அவனது சகோதனரனும் இரு சக்கரவாகனத்தில் வனப்பகுதி வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பொழுது, அவர்களின் வீட்டிற்கு அருகில் உள்ள சேரிப்பகுதி இளைஞர்களால் தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஞாயிறு இரவு 11 மணியளவில் எனது குழந்தையை சிலர் கடத்தி சென்று விட்டனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மூன்று மணி நேரத்திற்கு பிறகு எங்களது வீட்டிற்கு அருகே உள்ள புதர்பகுதியில் உடம்பிலும், அவரது பிறப்புறுப்பில் ரத்தம் வழிய மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம் என அச்சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். எனக்கு குற்றவாளியை அடையாளம் தெரியும். என்னை பலாத்காரம் செய்தவர் கைக்குட்டையால் தனது முகத்தை மறைத்திருந்தாலும், அவர்களில் ஒருவனது சிரிப்பு நான் இதற்கு முன் கேட்டுள்ளேன். அவரை முன்பே பார்த்திருக்கிறேன், என்னால் அவரை அடையாளம் காட்ட முடியும் என போலீஸாரிடம் கூறியுள்ளார் அந்த சிறுமி.

சிறுமியின் அறிவான வாக்குமூலத்தினை அடிப்படையாக வைத்து, குற்றவாளிகளை பிடிப்பதற்காக 25 பேர் கொண்ட காவலர்கள் குழுவை அனுப்பினர். சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள சேரிப்பகுதியை சேர்ந்த அந்த குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவர்களை காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

உயிருக்கு போராடிய நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அந்த சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி