ஆப்நகரம்

கொலை செய்யப்பட்ட திவ்யா இளவரசியின் உறவினரானது எப்படி ?

மன்னார்குடி காவல்நிலையம் எதிரே கடந்த 17 ஆம் தேதி டாக்டரின் மனைவி திவ்யா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதனை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

TNN 1 Aug 2017, 5:27 pm
மன்னார்குடி காவல்நிலையம் எதிரே கடந்த 17 ஆம் தேதி டாக்டரின் மனைவி திவ்யா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதனை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
Samayam Tamil how divya has become the relative of ilavarasi
கொலை செய்யப்பட்ட திவ்யா இளவரசியின் உறவினரானது எப்படி ?



இந்தக் கொலைக்கும் அவரது கணவரின் குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வர காவல்துறையினர் திவ்யாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து விசாரித்தனர். அப்போது, திவ்யாவைக் கொன்றதை அவர்கள் ஒப்புக் கொண்டதாக செய்தி வெளியானது.

தற்போது கொலையான திவ்யா, சிறையில் இருக்கும் இளவரசிக்கு உறவு என்பது தெரிய வந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் சேரன்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ கார்த்திகேயன் மகள் திவ்யா. இவருக்கும், மன்னார்குடியைச் சேர்ந்த முத்தழகன், ராணி தம்பதியின் மகனான திருச்சி அப்போலோவில் மருத்துவராகப் பணியாற்றும் இளஞ்சேரனுக்கும், கடந்த 2011-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திவ்யாவின் மாமனாரான முத்தழகன் , மன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.பாலகிருஷ்ணனின் மகன் .

திவ்யாவின் மாமனாரான முத்தழகனின் சகோதரி வளர்மதி. இந்த வளர்மதிதான் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்று சிறையில் இருக்கும் இளவரசியின் அண்ணன் வடுகநாதனின் மனைவியாவார்.

how divya has become the relative of ilavarasi

அடுத்த செய்தி