ஆப்நகரம்

மின்சாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளும் அதிசய மனிதன்

மின்சாரம் தாக்கினாலும் எதுவும் ஆகாததோடு, அதை உணவாக எடுத்துக்கொள்ளும் மனிதன் உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 11 Aug 2017, 7:02 pm
மின்சாரம் தாக்கினாலும் எதுவும் ஆகாததோடு, அதை உணவாக எடுத்துக்கொள்ளும் மனிதன் உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil human light bulb claims gets energy electricity
மின்சாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளும் அதிசய மனிதன்


உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரை சேர்ந்தவர் நரேஷ் குமார் (42). இவர் மீது மின்சாரம் தாக்கினாலும் ஒன்றும் ஆவதில்லை என்பதால் இவரை மின்சார மனிதன் என அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

நரேஷ் குமார் ஒரு முறை ஏதேச்சையாகா மின்சார ஒயரை தொட்டுவிட்டார். ஆனால் அவர் மீது மின்சாரம் பாயவில்லை. இதன் மூலம் தனக்கு அபூர்வ சக்தி இருப்பதை தெரிந்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து நரேஷ் குமார் பேசுகையில், “ஒருமுறை மின்சார ஒயரை தொட்ட போது ஷாக் அடிக்க வில்லை. அதனால் மறுபடியும் முயற்சி செய்த போது எதுவும் ஆகவில்லை. இதன் பின் தொலைக்காட்சிப் பெட்டி, வாஷிங் மெஷின், குளிர்சாதனப் பெட்டி என எல்லாவகையான மின்சார ஒயரையும் நான் வெறும் கையால் தொட்டுள்ளேன்.

சில நாட்களில் வீட்டில் உணவில்லாத போது மின்சார ஒயர்களை என் வாயில் வைத்து 30 நிமிடம் நிற்பேன். அதன் பின் என் பசி அடங்கி விடும். ” என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி