ஆப்நகரம்

மீன்குழம்பு சமைக்காததால் சண்டை; மனைவி தீக்குளிப்பு; காப்பாற்ற முயன்று கணவரும் பலி!

மீன்குழுப்பிற்காக கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 9 Feb 2018, 11:16 am
திருச்சி: மீன்குழுப்பிற்காக கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil husband and wife who tried to save their suicide was failed
மீன்குழம்பு சமைக்காததால் சண்டை; மனைவி தீக்குளிப்பு; காப்பாற்ற முயன்று கணவரும் பலி!


திருச்சி கே.கே.நகர் உஸ்மான் அலி நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(40). இவரது மனைவி சத்யா(35). இவர்களுக்கு ராகுல்(17), உதயா(15) ஆகிய மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் காலை, சத்யாவிடம் மீன் வாங்கி கொடுத்து சமைத்து வைக்கும் படி கூறிவிட்டு சுரேஷ் சென்றுள்ளார்.

இதையடுத்து மாலை 3 மணயளவில் வீடு திரும்பிய அவர், மனைவியிடம் சாப்பிட மீன் குழம்பு கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

ஆனால் மீன் குழம்பு சமைக்காததை கண்டு, கோபமடைந்த சுரேஷ், மனைவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த சத்யா, உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டு கழிவறைக்கு சென்று தாளிட்டுக் கொண்டார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சுரேஷ், கதவை உடைத்து மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது வலி தாங்க முடியாமல் கணவரை கட்டிப்பிடித்தார்.

இதில் சுரேஷ் உடலில் தீப்பிடித்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். உடனே திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Husband and Wife who tried to save their suicide was failed.

அடுத்த செய்தி