ஆப்நகரம்

பண மோசடி: மனைவி, குழந்தைகளை கொன்று, வியாபாரி தற்கொலை

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, மனைவி, குழந்தைகளை கொன்று வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

TNN 3 May 2017, 4:42 pm
திருச்சி: தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, மனைவி, குழந்தைகளை கொன்று வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
Samayam Tamil husband kills wife and children due to loss of his business
பண மோசடி: மனைவி, குழந்தைகளை கொன்று, வியாபாரி தற்கொலை


திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். அவர் தனியாக வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா என்பவர் விஸ்வநாதனிடம் உதவி கேட்டுள்ளார். ஸ்ரீரங்கம் பகுதியில் பரத நாட்டிய பயிற்சி பள்ளி தொடங்கினால், வெளிநாட்டினர் அதிகம் வருவர் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதை நம்பி, பல்வேறு நபர்களிடம் ரூ.1 கோடி வரை கடன் வாங்கி சங்கீதாவிடம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் பரதநாட்டியம் தொடர்பான எந்தவித வேலைகளையும் அவர் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளார். இதனால் விஸ்வநாதன் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் அவர் தனது மனைவி தெய்வானை, மகன் குணசேகரன்(7), மகள் கிஷாந்தினி(1) ஆகியோரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Husband kills wife and children due to loss of his business.

அடுத்த செய்தி