ஆப்நகரம்

வீடியோவுக்காக உயிருடன் நாய்களை எரித்த கொடூரம்

5 இளைஞர்கள் சேர்ந்து 3 நாய்க்குட்டிகளை உயிருடன் எரித்ததுடன், அதனை வீடியோ பதிவுசெய்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.

TNN 21 Jul 2016, 3:23 am
ஹைதராபாத்: 5 இளைஞர்கள் சேர்ந்து 3 நாய்க்குட்டிகளை உயிருடன் எரித்ததுடன், அதனை வீடியோ பதிவுசெய்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.
Samayam Tamil hyderabad boys burn 3 puppies alive record video
வீடியோவுக்காக உயிருடன் நாய்களை எரித்த கொடூரம்


அண்மையில், சென்னை குன்றத்தூர் அருகே 2 மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மாடியிலிருந்து நாயை தூக்கி வீசி அதனை வீடியோ பதிவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது, 3 நாய்க்குட்டிகளை 5 இளைஞர்கள் உயிருடன் எரிக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தின் முஷீராபாத் பகுதியில் உள்ள வாஜீர் சுடுகாட்டில், 5 இளைஞர்கள் கட்டைகளைக் கொண்டு தீ மூட்டி, அதில் மூன்று நாய்க்குட்டிகளை உயிருடன் வீசி எறிந்து கொன்றுள்ளனர். அந்த காட்சியை வீடியோவாகவும் பதிவுசெய்த அவர்கள் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விலங்கின ஆர்வலர்கள் சிலர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், சந்தேகத்திற்குரிய ஐந்து பேரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரும் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி