ஆப்நகரம்

ஐதராபாத்தில் சந்திர கிரகணத்தன்று பெண்குழந்தை தலையை வெட்டி கொடூர பூஜை!

குழந்தையின் தலையை வெட்டி கொடூர பூஜை செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 16 Feb 2018, 4:53 pm
ஐதராபாத்: குழந்தையின் தலையை வெட்டி கொடூர பூஜை செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil hyderabad child choped the head for prayers
ஐதராபாத்தில் சந்திர கிரகணத்தன்று பெண்குழந்தை தலையை வெட்டி கொடூர பூஜை!


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உப்பலில் ஒரு வீட்டில் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது கார் ஓட்டுநர் ராஜசேகருக்கு சொந்தமானது.

இந்நிலையில் பூஜையில் குழந்தையின் தலையை வெட்டிக் கொண்டு வந்திருந்தனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், குழந்தை தலை துண்டிக்கப்பட்டு தனியாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஸ்ரீலதாவிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சரிவரத் தகவல் தெரிவிக்கவில்லை.

பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதையடுத்து நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தையை கடத்தி வந்து, மூசி ஆற்றங்கரையில் கழுத்தை அறுத்து உடலை ஆற்றில் வீசிவிட்டுத் தலையை வீட்டுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Hyderabad child choped the head for prayers.

அடுத்த செய்தி