ஆப்நகரம்

செல்ஃபி எடுக்க முயன்ற போது, ரயில் மோதி சைபர் செக்யூரிட்டி வல்லுநர் பலி!

ரயில் மோதிய விபத்தில், செல்ஃபி எடுக்க முயற்சித்தவர் பலியானார்.

Samayam Tamil 16 Jul 2018, 3:20 pm
கொல்கத்தா: ரயில் மோதிய விபத்தில், செல்ஃபி எடுக்க முயற்சித்தவர் பலியானார்.
Samayam Tamil Hyderabad Techie


ஐதராபாத் அருகே உள்ள கொவ்வூரைச் சேர்ந்தவர் கண்டமணி ஸ்ரீ வயூபுத்ரா. இவருக்கு விஜயவாடாவில் சைபர் செக்யூரிட்டி பிரிவில் வேலை கிடைத்தது. இதற்காக ஒருவாரம் முன்பு அங்கு சென்ற அவர், சொதேபூர் நிறுவனத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார். நேற்று மதியம், இரு நண்பர்களுடன் நகரைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்.

இந்நிலையில் நண்பகல் 12 மணியளவில் ஹூக்ளி ஆற்றங்கரை ஓரத்தில் செல்ஃபி எடுக்க முயற்சித்தார். அப்போது அவ்வழியே வந்த ரயில் மோதி வயூபுத்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பேசிய அவருடைய நண்பர் பினோய் ஷிவராம், நாங்கள் ஒன்றாக பேசிக் கொண்டு தான் சென்றோம். அப்போது வயூபுத்ரா தனது செல்போனை எடுத்துக் கொண்டு, ஹூக்ளி ஆற்றங்கரை நோக்கிச் சென்றார்.

அங்கு நீல நிற வானம் மற்றும் வெள்ளை நிற மேகக் கூட்டங்கள் கொண்ட பின்புலத்துடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தார். அவர் நகர்ந்து செல்கையில் ரயில் தடம் இருப்பதை கவனிக்கவில்லை. அந்தப் பாதையில் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட நாங்கள் வயூபுத்ராவை நோக்கி கத்தி எச்சரித்தோம். இதனை உணர்ந்த அவர், ரயில் பாதையில் இருந்து குதித்து, தப்பிக்க முயற்சித்தார்.

அதற்குள் ரயில் வயூபுத்ரா மீது மோதியது என்று வேதனையுடன் தெரிவித்தார். இந்த விபத்தில் ரயிலின் முன்புறம் இருக்கும் 'V' வடிவ இரும்பு வடிவமைப்பில் சிக்கிக் கொண்டார். உடனே ரயில் நிறுத்தப்பட்டு, 45 நிமிட போராட்டத்திற்கு பின், வயூபுத்ரா மீட்கப்பட்டார்.

அப்போது அவர் உயிருடன் இருந்தார். பின்னர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி 2.30 மணியளவில் வயூபுத்ரா உயிரிழந்தார். இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், வயூபுத்ராவிற்கு உட்புற காயங்களால், நுரையீரல் மற்றும் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

Hyderabad techie taking pics on mobile hit by train, dies.

அடுத்த செய்தி