ஆப்நகரம்

வங்கியை மோசடியாளர்களிடம் இருந்து வங்கி பிரச்னையை தீர்க்க சிறப்பு பூஜை

அண்மையில் பஞ்சாப் நேசனல் வங்கியில் 1400 கோடியை நிரவ் மோடி மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மாபெரும் மோசடி அம்பலமானதிலிருந்து நாட்டின் நிதிநிலைமை குறித்து பல சந்தேகம் எழுந்தது.

Samayam Tamil 21 Feb 2018, 1:25 pm
ஐதராபாத் : அண்மையில் பஞ்சாப் நேசனல் வங்கியில் 1400 கோடியை நிரவ் மோடி மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மாபெரும் மோசடி அம்பலமானதிலிருந்து நாட்டின் நிதிநிலைமை குறித்து பல சந்தேகம் எழுந்தது.
Samayam Tamil hyderabad temple holds special puja to solve banking crisis
வங்கியை மோசடியாளர்களிடம் இருந்து வங்கி பிரச்னையை தீர்க்க சிறப்பு பூஜை


சிறப்பு பூஜை :
வங்கிகளை நீரவ் மோடி போன்ற மோசடி மன்னர்களிடம் காக்க ஐதராபாத் அருகே உள்ள சில்கூர் பாலாஜி கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இதுகுறித்து அந்த கோயிலின் தலைமை பூசாரி செளந்தராஜன் மற்றும் கோபால கிருஷ்ணன் ஆகியோர் மோசடியாளர்களால் நாட்டில் உள்ள வங்கிகளின் பணம் பறிபோவதை தடுத்து, பணத்தை மீண்டும் வங்கிக்கு கிடைக்க சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதன் படி இன்று சில்கூர் பாலாஜி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. இனி பொதுமக்களின் பணம் யாரும் மோசடி செய்யாமல் இருக்கவும், மோசடி செய்தவர்களிடமிருந்து மீண்டும் பணத்தை பறிமுதல் செய்ய பூஜை நடந்தது.

அடுத்த செய்தி