ஆப்நகரம்

ஐ.ஏ.எஸ் அதிகாரி பெயரில் போலி பேஸ்புக் கணக்கு:இளம்பெண் கைது..!

தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை நடத்தி வந்ததாக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 27 Dec 2016, 4:33 pm
தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை நடத்தி வந்ததாக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil ias aspirant arrested for fake fb account
ஐ.ஏ.எஸ் அதிகாரி பெயரில் போலி பேஸ்புக் கணக்கு:இளம்பெண் கைது..!


தெலங்கானா மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக ஜெயேஸ் ரஞ்சன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி வகித்து வருகிறார்.இந்நிலையில் இவருடைய பெயரில் போலி பேஸ்புக் கணக்கு ஒன்று துவங்கப்பட்டு,பல தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வந்துள்ளன.இதனை அறிந்த ஜெயேஸ் ரஞ்சன் இது குறித்து சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய தெலங்கானா சைபர் கிரைம் காவல்துறையினர்,ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வரும் இளம்பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.அந்த பெண் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் ,மனநல கோளாறுகளை கொண்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள இளம்பெண் சில காலம் முன்னர் ஜெயேஸ் ரஞ்சனின் மேடைப் பேச்சை கேட்டுள்ளார்.அவரின் பேச்சின் மூலம் ஈர்க்கப்பட்ட அந்த இளம்பெண்,ஜெயேஸ் ரஞ்சன் பெயரிலேயே போலி பேஸ்புக் கணக்கை துவங்கியுள்ளார்.அந்த பெண்ணின் எதிர்காலம் கருதி,அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.ஆனால் அவர் காந்தி நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி,ஐ.ஏ.ஸ் தேர்வுக்கு தயாராகி வருபவர் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

IAS aspirant arrested for fake FB account

அடுத்த செய்தி