ஆப்நகரம்

பேஸ்புக் தோழியால் விபரீதம்; தற்கொலை செய்து கொண்ட ஐஏஎஸ் மாணவர்!

ஐஏஎஸ் மாணவர் தனது தோழி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

Samayam Tamil 5 May 2018, 11:17 pm
நாகை: ஐஏஎஸ் மாணவர் தனது தோழி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
Samayam Tamil FB Suicide
பேஸ்புக் தோழி


நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தென்னவன்(22). இவர் பூந்தமல்லியில் தங்கியுள்ளார். மேலும் அண்ணாநகரில் உள்ள தனியார் பயிற்சி வகுப்பில் ஐஏஎஸ் போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இவருக்கு பேஸ்புக் மூலம் சட்டக் கல்லூரி மாணவியுடன் நட்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி, தோழி வீட்டிற்கு சென்ற தென்னவன், அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். தென்னவன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து வருகிறது.

தென்னவன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

IAS aspirant suicide in facebook girl friend home.

அடுத்த செய்தி