ஆப்நகரம்

கொடைக்கானலில் மணல் கொள்ளை; வருவாய் துறையினரும் உடந்தை!

கொடைக்கானலில், ஆற்று மணல் கொள்ளை நடந்து வருவதாகவும், இதற்கு வருவாய் துறையினரும் உடந்தை என்றும் செய்திகள் வந்துள்ளன.

TNN 15 Dec 2017, 10:50 am
கொடைக்கானலில், ஆற்று மணல் கொள்ளை நடந்து வருவதாகவும், இதற்கு வருவாய் துறையினரும் உடந்தை என்றும் செய்திகள் வந்துள்ளன.
Samayam Tamil illegal river sand mining in kodaikanal
கொடைக்கானலில் மணல் கொள்ளை; வருவாய் துறையினரும் உடந்தை!


மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படம் கொடைக்கானலில், உள்ள கீழ்மலைக் கிராமம் அருகே கள்ளாறு என்ற ஆறு ஓடுகிறது. பழனியில் உள்ள மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருப்பதும் இந்த கள்ளாறு தான்.

இந்நிலையில், கள்ளாறு ஆற்றின் மணலை, சட்டத்திற்கு புறம்பாக பல வருடங்களாக மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கு வருவாய் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இதனால், கொடைக்கானலின் இயற்கை வளம், சமுதாய வளம் பாதிக்கப்படுவதாகவும், இதை உடனடியாக தடுத்து நிறுத்தி தட்டி கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

இது குறித்து அங்குள்ள அஞ்சுவீடு என்ற கிராமத்தில் மக்கள் கூறுகையில், பல வருடங்களாக நடக்கும் இந்த மணல் கொள்ளை சம்பவத்தை குறித்து வருவாய்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றும் வேதனை தெரிவித்தனர்.

அடுத்த செய்தி