ஆப்நகரம்

திருப்பூர்: நாயை கொலை செய்தவர் மீது வழக்குப்பதிவு

திருப்பூர்: திருப்பூர் அருகே தெருநாயை அடித்துக் கொலை செய்தவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

TNN 22 Aug 2016, 8:51 am
திருப்பூர்: திருப்பூர் அருகே தெருநாயை அடித்துக் கொலை செய்தவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil in tirupur a man killed dog
திருப்பூர்: நாயை கொலை செய்தவர் மீது வழக்குப்பதிவு


திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியை சேர்ந்த ஈஸ்வர‌ன், இவர் தனது வீட்டில் மாடு கன்று குட்டியை வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவரது கன்றுக்குட்டியை தெருநாய் கடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் அந்த நாயை‌க் கட்டி வைத்து அடித்துள்ளார் . இதில் படுகாயமடைந்த அந்த நாய் இறந்து விட்டது . இதை அப்பகுதியை சேர்ந்தவர் வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர் அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு புளுகிராஸ் அமைப்பிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ஈஸ்வரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி