சென்னை அடுத்த பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் G.M textiles என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளாக துணி கடை இயங்கி வருகிறது, கடந்த ஓர் ஆண்டுகளாக சாலமன் (22) என்பவர் துணி கடையில் பணியாற்றி வருகிறார்.
இன்று காலை சாலமன் கடையில் இருந்தபோது கடைக்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலமனிடம் பேசிக்கொண்டிருந்தார்.திடீரென இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தனர்.
அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த இரண்டு பேர் வலுக்கட்டாயமாக சாலமனை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சாலமனுடைய உறவினர் முத்து கிருஷ்ணன் (47)என்பவர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் பேரில் நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து அனைத்து காவல் நிலையங்களிலும் உஷார் படுத்தப்பட்டது.
இதனையடுத்து அண்ணாநகரில் கடத்தப்பட்ட கும்பல் இருப்பதாக தகவல் அறிந்து அண்ணாநகர் போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நீலாங்கரை ஆய்வாளர் நேரில் சென்று விசாரணை நடத்தியதில் சாலமனுக்கும் வெட்டுவாங்கேணியை சேர்ந்த முகமது ஆரிப்(30) அவரது மனைவி பாத்திமா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் பாத்திமா தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சாலமனுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த பாத்திமா கணவர் முகமது ஆரிப் தனது உறவினர்ளுடன் சேர்ந்து சாலமனை கடத்தியதாக தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட வெட்டுவாங்கேணி சேர்ந்த முகமது ஆரிப் (29) துரைப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (22) கதிர்வேல் (19)பரத்(20)மஞ்சுளா (45)ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று காலை சாலமன் கடையில் இருந்தபோது கடைக்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலமனிடம் பேசிக்கொண்டிருந்தார்.திடீரென இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தனர்.
அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த இரண்டு பேர் வலுக்கட்டாயமாக சாலமனை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சாலமனுடைய உறவினர் முத்து கிருஷ்ணன் (47)என்பவர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் பேரில் நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து அனைத்து காவல் நிலையங்களிலும் உஷார் படுத்தப்பட்டது.
இதனையடுத்து அண்ணாநகரில் கடத்தப்பட்ட கும்பல் இருப்பதாக தகவல் அறிந்து அண்ணாநகர் போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நீலாங்கரை ஆய்வாளர் நேரில் சென்று விசாரணை நடத்தியதில் சாலமனுக்கும் வெட்டுவாங்கேணியை சேர்ந்த முகமது ஆரிப்(30) அவரது மனைவி பாத்திமா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் பாத்திமா தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சாலமனுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த பாத்திமா கணவர் முகமது ஆரிப் தனது உறவினர்ளுடன் சேர்ந்து சாலமனை கடத்தியதாக தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட வெட்டுவாங்கேணி சேர்ந்த முகமது ஆரிப் (29) துரைப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (22) கதிர்வேல் (19)பரத்(20)மஞ்சுளா (45)ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.