ஆப்நகரம்

காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் உயிரிழப்பில் இந்தியா முதலிடம்.!

காற்று மாசுபாடு காரணமாக, உயிரிழப்பவர்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

TNN 20 Oct 2017, 12:04 pm
காற்று மாசுபாடு காரணமாக, உயிரிழப்பவர்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil india is got the first place for air pollution death
காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் உயிரிழப்பில் இந்தியா முதலிடம்.!


மாசு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான ‘லான்செட் குழு’ அமைப்பு நடத்திய ஆய்வில், கடந்த 2015ம் ஆண்டு காற்று மாசுபாடு காரணமாக உலகம் முழுவதும் 90 லட்சம் பேர் பலியாகியுள்ளனர் என்றும் இதில் அதிகபட்சமாக இந்தியாவில் 25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இதில் காற்று மாசுபாடு காரணமாக, 18 லட்சம் பேர் உயிரிழந்து, சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. காற்று மாசு காரணமாக உலகளவில் 6 பேரில் ஒருவர் இறந்து வருகின்றனர். இது வளரும் நாடுகளில் தான் அதிகம் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இது எய்ட்ஸ், மலேரியா, காசநோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

India is got the first place for air pollution death.

அடுத்த செய்தி