ஆப்நகரம்

தெருவில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை; எலிகள் கடித்து தின்றதால் உயிரிழந்த சோகம்!

பெண் குழந்தையை எலிகள் கடித்ததால், இறந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 7 Jun 2018, 3:30 pm
ஐதராபாத்: பெண் குழந்தையை எலிகள் கடித்ததால், இறந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil Infant Girl


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த நச்சாராம் கிராமத்தைச் சேர்ந்த அகமது, இன்று காலை தொழுகைக்காக மசூதிக்குச் சென்றுள்ளார். அப்போது முட்புதரின் அருகே குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

உடனே தன்னிடம் இருந்த டார்ச் மூலம், அப்பகுதியில் தேடியுள்ளார். அங்கு பச்சிளம் பெண் குழந்தை ஒன்று இருந்தது தெரியவந்தது. உடனே உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, நிலோஃபர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பெண் குழந்தையின் உடலில் இருந்து, ஏராளமான ரத்தம் வெளியேறி இருந்ததால் சிகிச்சை பலனின்றி இறந்துபோனது. குழந்தையின் உடலில் ஏராளமான காயங்கள் இருந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நச்சாராம் கிராமத்தில் கர்ப்பிணி பெண்கள் யாராவது இருந்தார்களா என்றும், சமீபத்தில் குழந்தை பிறந்ததா என்றும் விசாரித்து வருகின்றனர். மேலும் குழந்தையின் டி.என்.ஏ மாதிரிகளை, விசாரணைக்காக சேகரித்து வைத்துள்ளனர்.

Infant girl Badly Bitten By Rats died at Niloufer hospital.

அடுத்த செய்தி