ஆப்நகரம்

காஷ்மீர் தனி நாடு? கேள்வி தாளில் குளறுபடி

காஷ்மீர் தனி நாடு என்று கேள்வி தாளில் குறிப்பிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

TNN 12 Oct 2017, 10:51 pm
காஷ்மீர் தனி நாடு என்று கேள்வி தாளில் குறிப்பிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
Samayam Tamil is kashmir a country bihar state school question paper
காஷ்மீர் தனி நாடு? கேள்வி தாளில் குளறுபடி


பீகாரில் கடந்த அக்டோபர் 5ம் தேதி, அனைத்து அரசு பள்ளிகளிலும் தேர்வு நடைபெற்றது. இதில், மத்திய அரசின் சர்வ ஷிக்சா அபியான் கீழ், மற்றும் மாநில பள்ளி திட்டகழகத்தின் கண்காணிப்பில் செயல்படும் அமைப்பால், கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏழாம் வகுப்பிற்கான வினாத்தாளில், ஒரு கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கேள்வி இது தான்.
கீழ்வரும் 5 நாடுகளில் உள்ள மக்களை எப்படி அழைப்பர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு தேர்வு செய்யும் விடையாக சீனா, நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர, இந்தியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டாண்டு காலமாக பிரச்னை உச்சத்தில் உள்ள நிலையில், தற்போது காஷ்மீர் தனி நாடு என சொல்லும் வகையில் கேட்கப்பட்டுள்ள இந்த கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி